திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி -திருகோணமலை வீதியின் 99ஆம் கட்டை சந்தியில் பெற்றோல் கடையொன்று, இன்று (09) மதியம் தீப்பற்றிக்கொண்டது.
இதனால் அக்கடை முற்றாக சேதமடைந்துள்ளதுடன், பெண்ணொருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு தடயவியல் பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.