தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பதாக, முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அழைப்புக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள நஸீர் அஹமட், ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுடன் சேர்ந்து காணிப்பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகிறார்கள்." என சாணக்கியன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளார்.