ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருந்தார். அவர் அவசரமாக இன்று (14) நாடு திரும்பவுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நாடு திரும்பவிருந்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி உடனடியாக நாடு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஜனாதிபதியின் நெருங்கிய சகா ஒருவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஜனாதிபதி தனது பயண அட்டவணையை மாற்றியுள்ளதாக சில சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் ஜனாதிபதி முந்தைய தினங்களில் நாட்டுக்கு திரும்புவார் என்று ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் பரவி வரும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் கூறினார்.
பசில் வீட்டிற்கு சென்லும் கதை!
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று இரவு தனது சொந்த ஊருக்கு செல்லவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், நெலும் மாவத்தை அலுவலகத்தின் பிரதானி ஒருவரிடம் வினவியபோது, அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று இரவு அமெரிக்கா செல்வதாக பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை என அவர் தெரிவித்தார்.
ஐனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்திற்கு முன்னர் பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி ஜயசுந்தரவை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கை ஆளும் கட்சிக்குள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிப்பதில் சிக்கல் உள்ளது.
அனுர பிரியதர்ஷன யாப்பா
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அமைதியான சூழல் நிலவும் போது பாராளுமன்ற அமர்வை முடிப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
அசாதாரண சூழ்நிலை காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற அமர்வின் முடிவு தொடர்பில் lankadeepa.lk மேற்கொண்ட விசாரணையில் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
அமர்வு முடிவடைந்தவுடன் அனைத்து குழுக்களும் நீக்கப்பட்டு அவை மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.
எந்தவொரு நாட்டினதும் நிறைவேற்று அதிகாரம் ஜனநாயகத்திற்கு அமையவே செயற்படுத்தப்பட வேண்டுமென அனுர பிரியதர்சன யாப்பா வலியுறுத்துகின்றார்.
பாராளுமன்ற அமர்வை முடிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்த போதிலும், அதனை நல்ல சிந்தனையுடன் செயற்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், கடந்த கால மக்களைப் போல் அல்லாமல், 21ஆம் நூற்றாண்டு மக்கள் ஜனநாயகம் பற்றி சிந்திக்கும் மற்றும் வாசிக்கும் விதம் ஒப்பீட்டளவில் மாற்றம் உள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் அனுர பிரியதர்ஷன யாப்பா கடமையாற்றினார்.