அமைச்சர் டளஸ் அழகப்பெரும சம்பந்தமாக தற்போது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கதைகள் பரவி வருவதாக தெரியவருகிறது. அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alahapperuma ) பெரும் ஏமாற்றத்துடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் இருந்து விலக உள்ளதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அழகப்பெரும தலைமை தாங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அண்மையில் பெண்களுக்கான பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் மனைவி பிரதீபா தர்மதாச (Pradeepa Darmadasa) நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக விமர்சன ரீதியான கருத்தை முன்வைத்திருந்தார்.