கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் மற்றும் மருத்துவமனை அமைப்பை பலப்படுத்துதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்ட "ஒற்றுமை மக்கள் சக்தியின் மூச்சு" நிகழ்ச்சித் திட்டத்திற்கு சீன அரசாங்கம் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்ததுடன், இராஜதந்திர மட்டத்தில் நிகழ்ச்சித் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியது.
இதன்படி சிறுநீரகம் தொடர்பான நோய்களை பரிசோதிப்பதற்கு அத்தியாவசியமான சிறுநீரக நோய் இயந்திரம் ஒன்றுக்கு சீன அரசாங்கம் இன்று (22) 200 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கி வைத்துள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் சென்ஹோங் இன்று (22) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இந்த நன்கொடையை வழங்கிவைத்தார்.இந்நிகழ்வில் சீனப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.
சமகி ஜன பலவேகய மூச்சு வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு 34 சுற்றுகளாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான வைத்தியசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியமையும் சீன அரசாங்கம் இன்று வழங்கிய நன்கொடையும் இந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்குக் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. .
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் சென்ஹாங், இவ்வாறான நன்கொடைகளை எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்குவதாகவும், இந்தச் செயற்பாடுகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும், முறையாகவும், சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதை அவதானித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இலங்கைப் பிரஜைகள் சார்பாக சீன அரசாங்கம் செய்த தியாகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாரம்பரிய எதிர்ப்பைத் தாண்டி நாட்டிற்கு மதிப்புக் கூட்டும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இராஜபக்ஷ அரசாங்கத்துடன் இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு நல்ல காரியத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உதவுவதற்கு சீன அரசாங்கம் தலையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.