மக்கள் விடுதலை முன்னணி போன்ற ஊழலற்ற கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவிக்கையில்,
"எல்லா இடதுசாரி சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாகும். தற்போது ஜே.வி.பி போன்ற ஊழலற்ற கட்சிக்கு ஸ்ரீ.ல.சு.க போன்ற சுத்தமான கட்சிகளுடன் இணைந்து எதிர்காலத்தை கட்டியெழுப்பும் வல்லமை உள்ளது. நாங்கள் கூட்டணியில் இணைந்து பணியாற்ற வேண்டுமாயின் அந்த திறமை எங்களிடம் உள்ளது என்று கூறினார்.