1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘த ஹிந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியதாக அந்த செய்தி கூறுகிறது.

“நாங்கள் 16 மாதங்களாக இது குறித்து கருத்துக்களை பரிமாறி வருகிறோம். இப்போது திருகோணமலை திட்டத்தின் நிலைமைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. குறித்த ஒப்பந்தத்தில் ஒரு மாதத்திற்குள் ஒப்பமிட எதிர்ப்பார்த்துள்ளோம்” என உதய கம்மன்பில கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இந்திய வழங்கவிருக்கும் கடன் தொகைக்காக திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பட்டுள்ளதாக இதற்கு முன்பு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி