தெற்காசியாவில் நிறை குறைந்த சிறுவர்கள் அதிகமுள்ள நாடுகளில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின்படி ஐந்து வயதில் உயரத்திற்கேற்ற நிறை இல்லாத சிறுவர்கள் நிறை குறைந்த சிறுவர்களாக கணிக்கப்படுகிறார்கள்.
உலக சுகாதார அமைப்பு ஆசியா மற்றும் பசிபிக் வலயத்தில் மேற்கொண்ட ஆய்வுகளில் இலங்கையிலும், இந்தியாவிலும் நிறை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அம்பலமாகியுள்ளது.
தவிரவும் பபுவா நியுகினி, மாலைதீவுகள், இந்துனேசியா ஆகிய நாடுகளிலும் நிறை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரகிறது.
கொவிட் பெருந்தொற்றின் தாக்கத்தினால் இந்நாட்டில் நிறை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனை நிலைமைகள் ஆபத்தில் தள்ளப்படக் கூடிய நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. உலகில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது.