கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.
இன்று மதியம் யாழ் சிறைச்சாலைக்கு வந்த அமைச்சர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அவருடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளும் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.
இதன்போது இந்திய மீனவர்களுக்கு புதுவருடத்தை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.