ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்க்க மக்கள் தயாராக இருந்தால், தமது கட்சியும் அதற்கு தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் மக்கள் வீதியில் இறங்க வேண்டும் என ஜே.வி.பி தலைவர் கூறுகிறார்.
இந்த அரசாங்கத்தை முன்னரே கவிழ்க்க வேண்டுமானால் மக்கள் வீதியில் இறங்க வேண்டும்! நீங்கள் தயாரா? அப்படி என்றால் ஆம் நாங்கள் தயார்! ”என்று கூறிய ஜே.வி.பி தலைவர், அரசாங்கங்களை இப்படித்தான் கவிழ்க்க வேண்டும் என்றும் கூறினார்.