புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திசக்குட்டி ஆராய்ச்சி தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இந்த அறிக்கை மிகவும் தீவிரமானது எனவும் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று (06/01) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திரு.திசக்குட்டி ஆராய்ச்சி போன்றவர் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு வந்தவர், அவ்வாறு முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு வந்தவர் அல்லது அரசியலமைப்பு தொடர்பில் சரியான புரிதல் இல்லாதவருக்குப் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் கிடைத்ததென்பதைப் பாரிய பிரச்சனையாகத் தான் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.