விவசாயிகளின் 07 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளின் தேசிய மாநாடு நேற்று (10) பொலன்னருவை புலதிஸி மண்டபத்தில் நடைபெற்றது.
தற்போது விவசாயிகள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினைகளை முன்வைத்து விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு அவர்களை ஒன்று திரட்டும் அமைப்பொன்றை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும். இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 07 கோரிக்கைகளாவன,
உர நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பிற்கு இழப்பீடு வழங்கு!
உர நிவாரணத்தை குறைக்காமல் சரியான தரத்துடன் உரம் வழங்கு!
விவசாய கடன் வட்டியை குறை!
விவசாய உபகரணங்களுக்கு வரி நிவாரணம் வழங்கு!
கம்பனிகளின் பார்வையிலிருந்து விவசாயியை விடுதலை செய்!
விவசாயத்தில் தீர்மானங்கள் எடுப்பதில் விவசாய நிபுணர்களினதும்,
விவசாயிகளினதும் தேசியை சபையொன்றை நிறுவு!
நிலத்தடி நீருக்கு மீற்றர் பொருத்தும் தீர்மானத்தை சுருட்டிக்கொள்!