1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு நிலையில், அதனை பெறுவதற்கு நாளாந்தம் மக்கள் நீண்ட வரிசையில் கால் வலிக்க காத்து கிடக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது கொழும்பின் சில பகுதிகளில் மண்ணெண்ணெய் வண்டிகளை வைத்திருந்தவர்கள் மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனையை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மக்களுக்கு மண்ணெண்ணைய் அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது மண்ணெண்ணெய்க்கு கடும் கிராக்கி நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வரிசையில் கால் வலிக்க காத்திருந்து வாக்குவதை விட வீட்டிற்கு அருகில் வரும் மண்ணெண்ணெய் வண்டியில் இருந்து மண்ணெண்ணெய் வாங்குவது இலகுவானது என்பதால், கொழும்பில் மண்ணெண்ணெய் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி