ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்கவின் விரிவான மருத்துவ பரிசோதனை அறிக்கையை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் போலியான சாட்சியங்களை உருவாக்கி சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான பாட்லி சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் ஆஜராகவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் இருப்பதால் விசாரணைக்கு வரவில்லை என சட்டத்தரணி ராஜிக கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
பாட்லி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணி கொடித்துவக்கு மேலும் தெரிவித்தார்.