ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (18) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஜனாதிபதி தனது உரையில் பல குறிப்பிடத்தக்க விடயங்களைத் தெரிவித்தார். இந்த புள்ளிகளில் சில பின்வருமாறு.
# பசுமை விவசாயம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு மனித உரிமை மீறல்களுக்கும் தமது அரசாங்கம் ஆதரவளிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும், அவ்வாறான செயற்பாடுகளை மன்னிக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
# வடக்கு, கிழக்கில் இராணுவத் தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட 90% காணிகளை மீள விடுவிக்கும் நடவடிக்கை தாம் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும், எஞ்சிய காணிகளையும் எதிர்காலத்தில் விடுவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"நாம் ஒரு சுதந்திர நாடு, சக்தி வாய்ந்த நாடுகளின் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை, ஒவ்வொரு நாட்டுடனும் நட்புறவைப் பேண விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.
# எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கும்போது மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
# வாகனங்களுக்கு மின்சாரம் வழங்குவதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
# நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
#பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் தொழில்முனைவு அறிவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இனவாதத்தை நிராகரிக்கிறோம். தற்போதைய அரசாங்கம் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் ஒரே நேரத்தில் பாதுகாக்க விரும்புகிறது," என்று அவர் கூறினார், "அதைத் தொடரும் அரசியல்வாதிகள்" "குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக" மக்களை மேலும் தூண்டுவதை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.
# ஃபைபர் மற்றும் 4ஜி நெட்வேர்க்குகள் விரிவுபடுத்தப்படும் என்றும், அனைத்துப் பகுதிகளுக்கும் புரோட்பேண்ட் அதிவேக இணைய வசதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்
# நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கப்படுவதாகவும் கூறுகிறார்