மும்பையில் கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் வெடி பொருள் வெடித்ததில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.வெடி விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.