மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்களாக நீதி கிடைக்காத தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சுடர் ஒளி மற்றும் உதயன் பத்திரிகைகளின் முன்னாள் திருகோணமலை செய்தியாளர் 'ராஜன்' எனும் சுப்பிரமணியம் சுகீர்தராஜன் நேற்று ஜனவரி 24 திங்கட்கிழமை மட்டக்களப்பு ஊடகக் கழகத்தில் மலர்வணக்கம் செலுத்தி கௌரவிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் மட்டக்களப்பு ஊடகவியலாளர் சங்கம் இணைந்து இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்துள்ளன.