இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை அடுத்து இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், இலங்கை மின்சார சபையின் உதவிப் பொது முகாமையாளரான சிரேஷ்ட மின் பொறியியலாளர் கலாநிதி ரொஹந்த அபேசேகர இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.