நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
69 கிலோகிராம் சீமெந்தை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.
மேலதிக விசாரணைகளை நுகர்வோர் விவகார அதிகார சபையின் கம்பஹா கிளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe