1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் எந்தவொரு தேர்தலிலும் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடாது என்று முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாறாக, அடுத்தத் தேர்தலுக்கான கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கியத் திட்டமொன்றில் தற்போது தாம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித்திட்டங்கள் தன்னிடம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் YouTube தளத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் உரத் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தான் மட்டுமன்றி அனைத்து மக்களும் இந்த மொட்டுக் கட்சி மீது அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சில கடைகளில் ஒரு பனடோல் கூட கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விலை குறைவாக இருக்கும் சுபீட்சமான நாட்டை தான் இந்த அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த அரசாங்கத்தை உருவாக்க ஶ்ரீங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைத்திருந்ததுடன், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கும் வாக்களித்திருந்தது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி