12 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கொரோ வைரஸ் தொற்றால் கடுமையாக சுகயீனமுற்று மாரவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசியப் பாடசாலையில் 6ம் தரத்தில் கல்வி கற்றுவந்த நாத்தாண்டிய தப்போவ பிரதேசத்தில் வசிக்கும் பி.எம்.டீ. மனீஸா குமாரி பர்னாந்து என்ற சிறுமி உயிரிழந்துள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 28ம் திகதி பாடசாலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் தீடீரென சுகயீனமுற்று மாரவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.