மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக மீது முட்டை மற்றும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்திய இருவரை பொலிஸாரிடம் ஒப்படைக்க அக்கட்சியின் சிலர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹ மாவட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று (30) கலகெடிஹேன ‘கிளாஸ்கொவ்” மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பின்னர் ஜே.வி.பி. உறுப்பினர்கள் அந்த இருவரையும் பிடித்து நிட்டம்புவ பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஏனைய குண்டர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.