மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்க அச்சம் கொள்ளத் தேவையில்லை என சமூக ஆர்வலர் தாரிக் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் தமிழ் பேசும் சமூகம் எவ்வித அச்சமுமின்றி நாட்டுப் பற்றுடன் தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின புறக்கணிப்பு அமர்வில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
சுதந்திரத்தை பல இளைஞர் குழுக்கள் புறக்கணித்திருந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எங்கே சுதந்திரம், எமக்கு சுதந்திரம் இல்லை என்ற கருத்துக்களும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
வழக்கறிஞர்கள், விரிவுரையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இந்த சுதந்திர தின புறக்கணிப்பு அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe