சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தொழிற்சங்க போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டத்தினால் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர்கள் பெரும் அசௌகரிங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் கடந்த திங்கட்கிழமை காலை முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நேற்று சுகாதார அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இன்றும் இந்தப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.