கொரோனா வைரஸ் தொற்று பரவலின் மத்தியில் நாட்டை மீண்டும் மூடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (09) கோரிக்கையொன்றை முன்வைத்தாா்.
அநுராதபுரத்தில் இன்று ஆயிரக்கணக்கானோரை கூட்டி கட்சி மாநாடு போட்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
சமூக இடைவெளி உள்ளிட்ட எந்த சுகாதார நடைமுறையும் இதில் பலர் பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி,
” உரம் அல்லது உரம் இல்லாமலேயே விவசாய சமூகத்தின் வருமானத்தை 100% அதிகரிப்பேன் என்பதைக் கூறிக்கொள்கின்றேன். இன்று நெல்லுக்கு சிறந்த விலை உள்ளது.
அபகரிக்கப்பட்ட நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விவசாய சமூகத்திற்காக என்னை அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன் என்ற உறுதிமொழியையும் வழங்குகின்றேன்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe