வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளினால் பல ஐரோப்பிய தயாரிப்புகள் இலங்கை சந்தைக்கு வருவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும், இலங்கை அரசாங்கத் தரப்பிற்கும் இடையில் நடந்த கலந்துரையாடலின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையில் நிலவும் டொலர் கையிருப்பு நெருக்கடியால் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொவிட் நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு, இலங்கை அரசாங்கத்தின் தவறான பொருளாதாரகக் கொள்கை என்பவற்றினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கையில் இறக்குமதிப் பொருட்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியன அதிருப்தி தெரிவித்திருந்தன.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe