வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் 25 வீத மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (14) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.
எனினும் வருடாந்தம் 2 பில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களினால் வரவு செலவுத் திட்டத்தில் 25 வீத மேலதிக வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தின் மூலம் வருங்கால வைப்பு நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஓய்வூதிய நிதி என்பன நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனை சரிசெய்ய உள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு 25 வீத மேலதிக வரி விதிக்க அமைச்சர்கள் பலரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கருத்திற் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, வாசுதேவ நாணயக்கார, கலாநிதி பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர மற்றும் அமைச்சர்கள் பலர் இந்த மேலதிகக் கட்டணத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானங்களை நாட்டுக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள். https://bit.ly/3uHGkH6