1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு என்பது தெளிவாகத் தெரிந்தால், தேவைப்பட்டால் அவரைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று சமூகமளித்த போதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் ரத்னதுங்கவை சிஐடிக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பின்னர் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் தாம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கேட்டுக்கொண்டதா அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த மேலும் தெரிவித்தார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி