ஜனாதிபதி செயலகத்தின் நான்கு முக்கிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற ஜெனரல் கே.பி. எகொடவெல அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு போக்குவரத்துப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியை சந்திக்க வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்காமை உள்ளிட்ட பல்வேறு நிர்வாக குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த இராணுவ அதிகாரி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் பொது முறைப்பாடுகள் பிரிவின் மேலதிக செயலாளரும் நீக்கப்பட்டுள்ளார். புதிய மேலதிக செயலாளராக நிஷாந்த வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துமிந்த நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சமிந்த குலரத்ன, அரசாங்கத்தின் பிரதம கொறடாவின் பாராளுமன்ற செயலாளராகவும் பணியாற்றுகிறார்.
சமிந்த குலரத்ன 20 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு அரசாங்க பதவிகளில் இருந்தவர் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நிர்வாக மற்றும் இராஜதந்திர அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.