1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்த இந்த மண்ணின் மக்களை மரியாதையுடன் நினைவு கூறுவதாக மொனராகலையில் இடம்பெற்ற தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தேசபந்து கரு ஜயசூரிய தெரிவித்தார்.


அங்கு மேலும் உரையாற்றிய அவர்,


நாம் சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் ஆகின்றது. நாம் சுதந்திரம் பெறும் சந்தர்ப்பத்தையும் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைய முடியுமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.


நாம் சுதந்திரம் பெற்றதற்கு பின் சுதந்திரம் அடைந்த நாட்டவர் எம்மை விட முன்னேறி உள்ளனர். எமது நாட்டில் இடம்பெற்ற இன, மத, அரசியல் பாகுபாடுகள் மற்றும் பயங்கரவாதம் ஆகிய காரணங்களினால் நாட்டின் வளர்ச்சி பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.
இவற்றிற்காக தனி நபருக்கோ வேறு ஏதும் குழுவுக்கும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. அதில் பயனில்லை. நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மக்கள் வாழ்ந்த ஊவா மாகாணம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்தகால தவறுகளை உணர்ந்து தேசிய மற்றும் மத ஒற்றுமையின் ஊடாக ஜனநாயகம்மிக்க சுதந்திரமான சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கத்துடனே நாம் இங்கு வருகை தந்தோரம். நாம் எந்த ஒரு கட்சி சார்ந்தும் செயற்படவில்லை. எமக்கு இனவாத கொள்கைகளும் இல்லை. அனைத்து மதங்களும் சமாதானத்தையே போதிக்கின்றது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு வாழும் மதத்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் எமது இந்த உன்னத நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு பக்கபலமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
இந்த கலந்துரையாடலில் வேடர்களின் தலைவர் கலந்து கொண்டமை எமக்கு மாபெரும் சக்தியாகும். அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நாம் செயற்படுவோம்.
ஏனைய உலக நாடுகள் போன்றே நாமும் பாரிய சவால்களை எதிர்நோக்கி உள்ளோம். கொரோனா தொற்று, பொருளாதார வீழ்ச்சி காரணமாக நாட்டு மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இத்தகைய சூழ்நிலையிலும் இன மற்றும் மத வன்முறைகளை தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.
மீண்டும் நாட்டில் வன்முறைகள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தற்போது காணப்படும் நெருக்கடிகளிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கொள்கை ரீதியாக ஒன்று திரள வேண்டும். எமக்கு உலகில் தனித்து வாழ முடியாது. நாம் சர்வதேச மரியாதையையும் பெற வேண்டும். ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நாட்டை தேடி சுற்றுலா பயணிகளும் முதலீட்டாளர்களும் வருவது உறுதியாகும்.
அனைத்து பிரஜைகளுக்கும் நட்புக்கரம் நீட்டும்மாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த விடயங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம். என்றார்.

 jaffna w

 

14

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

15

15

https://bit.ly/3uHGkH6

16

 

17

18 19

20

21 22

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி