ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து 'முழு நாடும் சரியான பாதையில்" என்ற தேசிய விஞ்ஞாபனத்தை இன்று வெளியிட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, மொனாக் இம்பிரியல் மண்டத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இக் கொள்கையானது பிவித்துரு ஹெல உறுமய, விஜய தரணி தேசிய சபை, தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா மஹஜன கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி, கடமை தேசிய அமைப்பு போன்ற 11 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இவ் விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளன.
திறந்த பொருளாதார கொள்கையினால் ஏற்பட்டுள்ள விளைவுகளில் இருந்து குறுகிய மற்றும் நீண்ட கால கொள்கை அடிப்படையில் மீள்வதற்கான வழிமுறைகள், சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைமை உள்ளிட்ட பல்வேறு பொதுக் காரணிகளை அடிப்டையாகக் கொண்டு பங்காளிக் கட்சிகள் தேசிய கொள்கை திட்டத்தை வெளியிட்டுள்ளனர்.