1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி!ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

'இன்று நாம் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து நாட்டை விடுவித்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் அனைவரும் பொதுவான உடன்பாட்டுக்கு வருவோம்' என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

மார்ச் 25ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சிறிகொத்தாவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் இணைய விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவவில் அண்மையில் இது தொடர்பான விளக்கமளிக்கும் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி