டாக்டர் பாலித சேரசிங்க உலகப் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் மட்டுமின்றி ஒரு ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேதத்தில் முதல் தரப் பட்டமும், ஜப்பானில் உள்ள டொயோமா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மருந்தியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
ஜப்பான் அரசிடமிருந்து உதவித்தொகை பெற்ற முதல் மற்றும் ஒரே ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பாலித சேரசிங்க ஆவர்.
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் வெளி ஆராய்ச்சியாளராகப் பணிபுரிவதற்காக பொது நல வாய நாடுகளிடமிருந்து உதவித்தொகையைப் பெற்ற முதல் ஆயுர்வேத மருத்துவர் ஆவார்.
மேலும் லண்டனில் உள்ள ”மிடில்செக்ஸ்” பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத துறையின் தலைவராக இருந்தார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு வெளியில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே இலங்கையர் இவர்தான்.
கலாநிதி பாலித சேரசிங்க ஜப்பானில் உள்ள ஆயுர்வேத கல்லூரியின் பணிப்பாளராகவும், பிரித்தானிய ஆயுர்வேத மருத்துவ கவுன்சிலின் செயலாளராகவும் உள்ளார்.
கலாநிதி பாலித சேரசிங்க நாட்டிற்கு தேவையற்றவரா?
அல்லது அவரால் நம் நாடு பலன் பெறவில்லையா?
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.