முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் பிறந்த தினம் இன்று (மார்ச் 07) அனுராதபுரத்தில் தேசிய சுதந்திர முன்னணி பல விஷேட சமய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவின் செல்வாக்கின் கீழ் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் ஜனாதிபதி நீக்கினார்.
இதன்படி, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில இருவரும் உடனடியாக தமது உத்தியோகபூர்வ வாகனங்களை கையளித்துள்ளனர்.
அமைச்சர் பதவியை இழந்தாலும் எந்த அமைச்சரும் மூன்று மாதங்கள் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருக்க அனுமதியிருந்தாலும், விமல் வீரவங்ச கடந்த வார இறுதியில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தனது தனிப்பட்ட உடமைகளை அகற்றி இன்று உத்தியோகபூர்வ குடியிருப்புகளை ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் இந்த வாரத்தில் தனது உத்தியோகபூர்வ குடியிருப்பை ஒப்படைக்க தீர்மானித்துள்ளார்.
ராஜபக்ஷக்கள் மங்கள சமரவீரவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கிய போது, அவரும் 24 மணித்தியாலங்களுக்குள் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை கையளித்துவிட்டு தனியார் வீடொன்றிற்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவுடன், அவர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத் தவிர, ஏனைய உத்தியோகத்தினர் உடனடியாக அழைத்துக்கொள்ளப்பட்டனர். ஆனால் பின்னர் அவை மீண்டும் இணைக்கப்பட்டன.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.