புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இலங்கையில் தற்போது ஆகக்கூடிய பேருந்து கட்டணமாக 1,303 முதல் 1,498 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சடுதியாக ஏற்பட்ட எரிபொருளின் விலையேற்றம் காரணமாக பேருந்து கட்டணத்தினை அதிகரிக்குமாறு கோரியிருந்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.