இலங்கையில் நிலவிவரும் தற்போதைய கடுமையான வெளிநாட்டு நிதி நெருக்கடியின் ஆரம்பம் 2007 இல் வெளியிடப்பட்ட 500 மில்லியன் டொலர் பிணைமுறி பத்திரங்கலுடன் ஆரம்பமாவதாக தெரியவந்துள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.குறித்த அறிக்கையில் “மகிந்த ராஜபக்ஷ காலத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் பிணைமுறி பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2007ல் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதன் மூலம் பெறப்பட்டது. பின்னர் 2009ல் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
2010ல் 1000 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், 2011 இல் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், பின்னர் 2014ல் 1500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பிணைமுறி பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த தினத்தில் வெளியிடப்பட்ட ஹன்சார்ட் (நாடாளுமன்ற நடவடிக்கைத் தொகுப்புகள்) தெரிவித்துள்ளது.
இதன்படி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பெருமளவிலான சர்வதேச வர்த்தகக் கடன்கள் பெறப்பட்டதை அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் 2007 முதல் 5.5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வணிகக் கடனைப் பெற்றுள்ளார்.2007 ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 2,084 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிவடையும் போது, மொத்த வெளிநாட்டு வர்த்தகக் கடன் 12,302 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
அப்போது குறிப்பிடப்பட்ட 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக தற்போதைய அமைச்சர் பந்துல குணவர்தன உண்மையில் 10.218 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளார்.
இதன்படி, மஹிந்த ராஜபக்சவின் 8 வருட ஆட்சியில் பாரியளவிலான வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் பெறப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.