அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இடம்பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
முரணாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளுக்கெதிராக இந்த அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
“முரணாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளுக்கெதிராக, வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுகின்றது என்றும் அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றதெனவும், நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிக்கின்றது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.