சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸாரால் நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளமையையும் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
இதனை பொலிஸாரால் தடுத்து நிறுத்த முற்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,
இதேவேளை ஊரடங்குச் சட்டத்தை மீறி மஹரகமவில் இன்று காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கும் பொலிஸார் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முற்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் தாம் உணவின்றி தவிப்பதாகக் கூறி மஹரகமவில் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Happening now in Mirihana, near President @GotabayaR s residence.
— Kalani Kumarasinghe (@KalaniWrites) March 31, 2022
The message is loud and clear: GO HOME #GoHomeRajapaksha pic.twitter.com/gEfyVfirK7
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#