நேற்றைய தினம் புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்ற அலி சப்ரி பதவி விலகியுள்ளார்.
அத்தோடு தற்போது பாராளுமன்றத்திற்கு வெளியில் உள்ள சூழ்நிலையை கையாள ஜனாதிபதி பொருத்தமான நபரை நியமிக்கும் வகையில் அவர் தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவும் முன்வந்துள்ளார்.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேர் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றனர்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் அலி சப்ரி வெளியிட்டுள்ளார்.