1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 10 சுயாதினமாக செயற்படும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று (08) பிற்பகல் நடைபெற்றது.


10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, திரன் அலஸ் மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 
நாட்டில் நிலவும் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உடனடி அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக உள்ளக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சமகி ஜன பலவேகய கட்சி கையெழுத்து சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
மக்கள் மீண்டும் முன்னோக்கிச் செல்லும் வகையில் அனைவரும் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி