தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர் குழுக்களும் சமூக ஊடக ஆர்வலர்களும் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு இளைஞர் சமூகம் ஆதரவளிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய இளைஞர்கள் குழு ஒன்று தம்மைச் சந்தித்து தற்போதைய இளைஞர் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இதற்கு முன்னர் அமைதியான போராட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரகங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இளைஞர் போராட்டத்தில் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு கட்சிக்குள் இருக்கும் இளைஞர் குழுக்களால் தற்போது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தனவுடன் இணைந்து அமைதியான முறையில் இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும், அதற்கு கட்சியின் ஆதரவைப் பெறுமாறும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் இளைஞர் ஆர்வலர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.