நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டி வடக்கின் அரசியல் கட்சிகள் கூட்டாக அறிக்கை!நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வரம்பற்ற அதிகாரங்களுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என வடக்கின் அரசியல் கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளன.
ஆறு தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டறிக்கையில், தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, அமைதியின்மையைத் தணிக்கவும், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், மக்கள் இயல்பு வாழ்க்கையை நடத்துவதற்கும் பாராளுமன்ற அதிகாரமளிக்கும் முறைக்கு செல்லுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த அறிக்கையில்,''இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக ஒவ்வொரு பிரிவினரின் அன்றாட வாழ்க்கையும் பொருளாதாரப் நெருக்கடியின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு, குறிப்பாக சுகாதாரம், உணவு மற்றும் கல்வி ஆகியவற்றில் தீர்வுகளை கோரி வீதிகளில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலைமையை அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் நாடு முழுவதுமாக அராஜகமாக மாறிவிடும் என ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, அதனை நீக்கிவிட்டு மீண்டும் பாராளுமன்ற முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும். என கோரியுள்ளனர்.