அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். இந்நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றது.
இதன்படி புதிய அமைச்சர்களாக,
தினேஷ் குணவர்தன - அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் வளங்கள் அமைச்சர்
ரமேஸ் பத்திரண - கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்
வைத்தியர் ரமேஷ் பதிரன- கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
திலும் அமுனுகம - போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்
கனகஹேரத் - நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர்
விதுர விக்கிரமநாயக்க - தொழில் அமைச்சர்
சானக வகும்பர - விவசாயம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர்
செஹான் சேமசிங்க - வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர்
மொஹான் பிரியதர்ஷன த சில்வா - நீர்பாசனத்துறை அமைச்சர்
விமலவீர திஸாநாயக்க - வனஜீவராசிகள் மற்றும் வனவளபாதுகாப்பு அமைச்சர்
காஞ்சன விஜயசேகர - வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்
தேனுக விதானகமகே - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
கலாநிதி நாலக கொடஹேவா - ஊடகத்துறை அமைச்சர்
பேராசிரியர் சன்ன ஜயசுமன - சுகாதாரத்துறை அமைச்சர்
நஸீர் அஹமட் - சுற்றாடற்துறை அமைச்சர்
பிரமித்த பண்டார தென்னகோன் - துறைமுக அமைச்சர்
பெரும்பாலான சிரேஷ்ட அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளை ஏற்க மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ,சமல் ராஜபக்ஷ உட்பட இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.