பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திலிருந்து விலகி சுயேட்சையாக செயற்படுவதாக அறிவித்திருந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 கட்சிகளின் 42 எம்.பி.க்கள் குழுவில் அவரும் ஒருவர்.
வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 11 அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேட்சையாக செயற்பட போவதாக பாராளுமன்றில் அறிவித்தனர்.
எனினும், ஜனநாயக இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த கயாஷான் நாவானந்த சுகாதார இராஜாங்க அமைச்சராக இன்று பதவியேற்றார்.
இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகிய 42 எம்.பி.க்கள் குழு தற்போது 38 நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் குறைந்துள்ளதுடன், நான்கு எம்.பி.க்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கயாஷான் நாவானந்தவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்னவும் இராஜாங்க அமைச்சு ஒன்றை ஏற்றுக்கொண்டார்.
கல்வி, சேவைகள் மற்றும் சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் இன்று பதவியேற்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சுப் பதவியை கடந்த வாரம் ஏற்றுக்கொண்டார்.
சுயேட்சை எம்.பி.க்கள் குழுவில் இருந்து மொத்தம் 4 எம்.பி.க்கள் தற்போது மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.