இறையாண்மையின் மூலம் ஜனாதிபதியை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பதந்காக அவரை பதவி நீக்கும் மனுவில் கையெழுத்து சேகரிக்கும் பிரச்சார நடவடிக்கை மக்கள் போராட்ட களத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள Black Cap Movement (BCM) அமைப்பாளர்கள், ராஜபக்ச ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று விரும்பும் சுமார் 7 மில்லியன் குடிமக்களின் கையெழுத்துக்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துக் குழுக்களும் பதவி நீக்கப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக நேற்று மாலை மக்கள் போராட்ட மைதானத்தில் உள்ள ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் Black Cap Movement (BCM) இயக்கத்தைச் சேர்ந்த விமுக்தி துஷாந்த தெரிவித்தார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.