நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் கோரிக்கை குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கடன் வழங்கும் திட்டத்திற்கான "பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல்களை" நடத்தியதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் கோரிக்கை குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கடன் வழங்கும் திட்டத்திற்கான "பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல்களை" நடத்தியதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அதன் சமூக பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவதற்கும் தற்போதைய நெருக்கடியின் போது ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கும் இலங்கை "நம்பகமான மற்றும் ஒத்திசைவான மூலோபாயத்தை" செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உள்ளடக்கியதாக நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாக்கி ஒரு அறிக்கையில், தங்கள் கடனாளிகளுடன் கூட்டுப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதிகாரிகளின் திட்டத்தை IMF குழு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு கடந்த 17 ஆம் திகதி வொசிங்டன் பயணமானார்கள்.
சர்வதேச நாயண நிதியத்துடன் கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் நாளை (24 )வரை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும், IMF உதவியை பெற்றுக்கொள்வதற்கு பூர்த்தி செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளதால் கடனை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட காலம் செல்லும்” என நேற்று வொசிங்டனில் இருந்து நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.