அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 120 எம்.பிக்களை திரட்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்பன்பில் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 120எம்பிக்களை திரட்டியுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் பதவி விலக தொடர்ந்தும் மறுத்தால், இந்த வராத்தில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி,
ஐக்கிய மக்கள் சக்தியின் 65 எம்.பிக்கள்,
பாராளுமன்றில் சுயேட்சையாக செயற்பட்டுவரும் 39 எம்.பிக்கள்,
பதவி விலகுமாறு பிரதருக்கு அழைப்பு விடுத்த மொட்டுக்கட்சியின் 10 எம்.பிக்கள் குழு
அன்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சியில் அமர்ந்த 3 முஸ்லிம் எம்.பிக்கள்
மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், டல்லஸ் அழகப்பெரும, சரித ஹேரத் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் இவ்வாறு அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.