ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இடையே இன்று(02) சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று(02) முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.