1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் ஜூலி சுங் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முக்கிய பங்கு தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் மிகக் கடுமையான பொருளாதார சவால்களைத் தணிக்க உதவும் வகையில், தனியார் துறை மற்றும் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து நிவாரணப் பொருட்களை பெற்றுகொள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்கான வழிகளையும் இதன்போது கலந்தாலோசித்ததாக தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி