மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி தூதுவர்களிடம் தெரிவித்தார்.
தற்போதுள்ள நிலைமையை தீர்ப்பதற்கு இலங்கைக்கு வழங்கக்கூடிய ஆதரவை வழங்குமாறு அந்த நாடுகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, தற்போது அந்த நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.